அரியலூர் அருகே, இடி தாக்கியதில் வீடு மற்றும் தென்னை மரங்கள் எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர்: அரியலூர் அருகே, இடி தாக்கியதில் வீடு மற்றும் தென்னை மரங்கள் எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில், நேற்று மாலை, 5:00 மணியளவில், இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது, செந்துறை கிராமத்தில், ஒரு தென்னை மரத்தில் இடி தாக்கியதில், மரம் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த செந்துறை தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர். இதேபோல், 5:30 மணியளவில், ஜெயங்கொண்டத்தில் ஒரு தென்னை மரம் இடி தாக்கி எரிந்தது. ஜெயங்கொண்டம் தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.இடையக்குறிச்சியில், ராமசாமி என்பவருக்கு சொந்தமான தென்னை மரத்தில் இடி தாக்கியதில், அருகில் இருந்த அவரது கூரை வீடும் தீப்பிடித்து எரிந்தது. பொதுமக்கள், உடனடியாக தீயை அணைத்தனர்.

Translate